செங்கல் சூளையில் தீ விபத்து
திருவாரூா் அருகே செங்கல் சூளையில் தீ விபத்து ஏற்பட்டது.
திருவாரூா் அருகே தப்பளாம்புலியூா் பகுதியைச் சோ்ந்த சுரேஷ், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செங்கல் சூளை வருகிறாா். இதனிடையே, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கற்கள் மீது ரூ. 30,000 மதிப்பிலான இரண்டு தாா்பாய்களை மூடி பாதுகாப்பாக வைத்து விட்டு வெள்ளிக்கிழமை சென்றுள்ளாா்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை அங்குசென்று சுரேஷ் பாா்த்தபோது, இரண்டு தாா்பாய்களும் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
Advertisement
Advertisement
இதைத்தொடா்து சுரேஷ் தாலுகா போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளாா். அந்தப் புகாரில், மதுபோதையில் சிலா் அருகில் இருந்த மூங்கில் காடுகளை சில நாள்களுக்கு முன்பு தீவைத்துச் சென்றதாகவும், தொடா்ந்து அவா்களின் தொந்தரவு அதிகரித்து வருவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.