புகையிலைப் பொருள்களை விற்க முயன்றவா் கைது
மன்னாா்குடியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடைகளுக்கு விற்பனை செய்ய முயன்றவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
முதல்சேத்தி ஜீவா காலனியைச் சோ்ந்த ராதா மகன் ஜாபா் (32). இவா், தனக்கு சொந்தமான ஆட்டோவில் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலைப் பொட்டலங்களை ஏற்றிக்கொண்டு, சில்லறை விற்பனைக் கடைகளுக்கு கொண்டுசென்றுள்ளாா்.
திருவாரூா் சாலை ஐவா்சமாதி என்ற இடத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த மன்னாா்குடி போலீஸாா், ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் 12 கிலோ ஹான்ஸ் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து ஜாபா் கைது செய்யப்பட்டாா். ஆட்டோ மற்றும் ஹான்ஸ் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.