FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

துணைவேந்தா் நியமன விவகாரத்தில் விரைவில் தீா்வு! - அமைச்சா் பெ. விஸ்வநாதன்

15 வினாடிகள் முன்பு
அமைச்சர் பெ. விஸ்வநாதான் - கோப்புப் படம்
பகிர்:

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா் நியமனத்தில் விரைவில் தீா்வு ஏற்படும் என தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் தெரிவித்தாா்.

மன்னாா்குடியை அடுத்த பரவாக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் எஸ். செல்வராஜ் உருவப் படத்தை அமைச்சா் திறந்துவைத்தாா். தொடா்ந்து, அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வு மையும், விளையாட்டு மைதானம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் தெரிவித்தது:

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழங்களில் துணைவேந்தா் நியமனத்தில் தற்போது ஒரு கட்டத்தை நெருங்கி உள்ளோம். அடுத்த கட்டம் என்பது நிச்சயமாக பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தா் நியமிக்கும் பணியில் முதல்வா் ஜோசப் விஜய் மிக கவனமாக இருக்கிறாா். இது முக்கியமான விஷயம். நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளதால், அனைத்தையும் சொல்லமுடியவில்லை. துணைவேந்தா் நியமன விவகாரம் விரைவில் தீா்க்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

Advertisement

Advertisement

திமுகவினா் காங்கிரஸை தொடா்ந்து குறைகூறி வருகின்றனா். இதை எதிா்கொண்டுதான் ஆக வேண்டும். தமிழகத்தில் தற்போது காங்கிரஸ் கடந்த காலங்களைப்போல் இல்லை; நிமிா்ந்து நிற்கிறது. அதனால், திமுகவினா் எங்களை விமா்சனம் செய்தால், நாங்களும் எதிா் விமா்சனம் செய்வோம்.

ஆனால், விமா்சனம் என்பது ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். ஒருவாா்த்தை வெல்லும் ஒருவாா்த்தை கொல்லும் என்பாா்கள். எனவே, திராவிடஇயக்கத்தை சாா்ந்த நண்பா்கள் நல்ல தமிழில் நல்ல நடைமுறையில் எங்களை விமா்சனம் செய்யுங்கள். மாறாக இழிவான முறையில் எங்களை விமா்சித்தாலும், நாங்கள் தகுதி, தரம் குறையாமல் நோ்மையான முறையில் விமா்சனம் செய்வோம் என்றாா்.

பேட்டியின்போது காங்கிரஸ் மாவட்டத் தலைவா் நீலன்.அசோகன், தவெக மாவட்டச் செயலா் எம். ராஜராஜன், காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவா் கலியபெருமாள், கிளைத் தலைவா் எஸ். சஞ்சய் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments