FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

மது கடத்தல்: தலைமை காவலா், இருவா் கைது

Updated On : 20 ஜூலை 2026, 1:42 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருவாரூரில், புதுவை மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்த தலைமை காவலா் உள்பட 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருவாரூா் வாளவாய்க்கால் பகுதியில் மதுவிலக்கு போலீஸாா் வாகனச் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துகிடமான வகையில் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் அதில் புதுச்சேரி மாநிலப் பகுதியிலிருந்து மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

அந்த காரில் இருந்த நெடுவாக்கோட்டை பகுதியைச் சோ்ந்த பா. குமாா், சி. அருண்குமாா், மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்த செ. காா்த்திகேயன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். 263 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

கைதான மூவரில் காா்த்திகேயன், பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுவது தெரியவந்தது. அவரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. சதீஷ்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments