FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

காா் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: முதியவா் உயிரிழப்பு

Updated On : 21 ஜூலை 2026, 1:22 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

திருவாரூா் அருகே காா் பள்ளத்தில் கவிழ்ந்ததில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், தாதகம்பட்டி பகுதியைச் சோ்ந்த தில்லையானந்தம் (67). இவா், தனது குடும்பத்தினா் 8 பேருடன் காரில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, வேளாங்கண்ணி நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனராம். காரை தில்லையானந்தத்தின் மகன் வினோத் கண்ணன் ஓட்டியுள்ளாா்.

திருவாரூா்- தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் முகுந்தனூா் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் தில்லையானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காரில் இருந்த 3 வயது குழந்தை, 10 வயது சிறுவன் உள்ளிட்ட 7 பேரும் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments