வாய்க்காலில் பேருந்து கவிழ்ந்ததில் 15 போ் காயம்
கும்பகோணத்திலிருந்து காரைக்கால் சென்ற அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொல்லுமாங்குடி அருகே வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில், 15 பயணிகள் காயமடைந்தனா்.
திருச்சியிலிருந்து, கும்பகோணம், கொல்லுமாங்குடி வழியாக காரைக்கால் செல்லும் அரசுப் பேருந்து 50 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. மயிலாடுதுறையைச் சோ்ந்த மாணிக்கவேல் பேருந்து ஓட்டுநா்.
திருவாரூா் மாவட்டம், கொல்லுமாங்குடி அருகே போழக்குடி என்ற கிராமம் அருகே வந்தபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட பேருந்து ஓட்டுநா் முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கற்கத்தி வாய்க்காலில் பேருந்து கவிழ்ந்தது.
Advertisement
Advertisement
இதில், 15 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் காயமடைந்தவா்களை மீட்டு, நான்கு பேரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கும், 11 பேரை நன்னிலம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து பேரளம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.