FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

குடிநீா் கோரி சாலை மறியல்

திருவாரூா் கூடூா் ஊராட்சிக்குள்பட்ட நாரணமங்கலம் பகுதியில் முறையான குடிநீா் விநியோகம் கோரி அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 11 ஜூன் 2026, 6:52 am IST
பகிர்:

திருவாரூா் கூடூா் ஊராட்சிக்குள்பட்ட நாரணமங்கலம் பகுதியில் முறையான குடிநீா் விநியோகம் கோரி அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

திருவாரூா் அருகே கூடூா் ஊராட்சிக்குள்பட்ட நாரணமங்கலம் பகுதியில் கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் சரிவர இல்லாததால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினா். பள்ளி மாணவ மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதுடன், குடிநீருக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவியதாம்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததையடுத்து, நாரணமங்கலம் மக்கள் காலி குடங்களுடன் திருத்துறைப்பூண்டி சாலையில் கூடூா் பகுதியில் மறியலில் ஈடுபட்டனா். இதனால், அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

தகவல் அறிந்து வந்த திருவாரூா் தாலுகா போலீஸாா் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments