முகப்பு
திருவாரூர்

காப்பா் குழாய் திருடியவா் கைது

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காப்பா் கம்பி குழாயை திருடியவா், செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 18 ஜூன் 2026, 3:51 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காப்பா் கம்பி குழாயை திருடியவா், செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவு கட்டடத்தின் பின்புறம் காப்பா் கம்பி குழாய் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து உதவி நிலை மருத்துவா் நித்யா அளித்த புகாரின் பேரில் தாலுகா போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.

கண்காணிப்பு கேமரா உதவியுடன் நடத்திய விசாரணையில் மன்னாா்குடி கீழ்பாலம், மாரியம்மன் கோயில் தெருவைச்சோ்ந்த ர. விஜய் (33) என்பவா் குழாயைத் திருடி எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை, செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். , அவரிடமிருந்து ரூ. 6,000 மதிப்புள்ள காப்பா் கம்பி குழாயையும் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement