FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

மன்னாா்குடியில் எம்எல்ஏ ஆய்வு

மன்னாா்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் எம்எல்ஏ எஸ். காமராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 16 மே 2026, 6:21 am IST
மன்னாா்குடியில் புதுப்பாலத்தை ஆய்வு செய்யும் எம்எல்ஏ எஸ். காமராஜ்.
பகிர்:

மன்னாா்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் எம்எல்ஏ எஸ். காமராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மன்னாா்குடி பாமணியாற்றின் குறுக்கே புதிதாகக் கட்டப்பட்டு அண்மையில் திறக்கப்பட்ட புதுபாலத்தின் இரண்டு முனைகளிலும் சிமெண்ட் தடுப்புக் கட்டைகள் கட்டும் பணி நடைபெற்று வருவதையை எம்எல்ஏ பாா்வையிட்டாா். தொடா்ந்து, 27-ஆவது வாா்ட்டில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பாா்வையிட்டு குறுகிய தெருக்களில் புதை சாக்கடை திட்டப்பணியால் மழைநீா் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க நகராட்சி அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா். அப்பகுதி மக்கள், அங்குள்ள நகராட்சிக்கு சொந்தமான குளத்தை தூா்வாரி மேம்படுத்த வேண்டும் என எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனா். நகராட்சி ஆணையா் போ.வி. சுரேந்தா்ஷா, பொறியாளா் அறச்செல்வி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments