மரத்தில் கார் மோதி 3 பேர் காயம்
புது தில்லி, அக். 8: சாலையோர மரத்தில் கார் மோதியதில் 3 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கிரீன் பார்க் பகுதியைச் சேர்ந்தவர் சத்யேந்திர குப்தா (31). இவரது நண்பர்கள் ஆதி
புது தில்லி, அக். 8: சாலையோர மரத்தில் கார் மோதியதில் 3 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கிரீன் பார்க் பகுதியைச் சேர்ந்தவர் சத்யேந்திர குப்தா (31). இவரது நண்பர்கள் ஆதித்ய குந்து (28), ஸ்ருதி (29). வெள்ளிக்கிழமை அதிகாலை இவர்கள் நட்சத்திர ஹோட்டலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது மதுரா ரோட்டில் சாலையோர மரத்தில் கார் மோதியது. இதில் மூவரும் காயமடைந்தனர். இவர்களை போலீஸôர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்களில் சத்யேந்திராவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மற்றொரு விபத்து: கடந்த மாதம் 29-ம் தேதி தில்லியில் பாலத்தில் இருந்து கார் கீழே விழுந்தது. இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சட்டக்கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.