சிபிஎஸ்இ 12 தேர்வில் சிறப்பிடம்: டிடிசி ஓட்டுநர் மகனுக்கு பாராட்டு
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வில் அறிவியல் பிரிவில் தில்லி அரசுப் பள்ளிகள் அளவில் முதலிடம் பெற்ற தில்லி போக்குவரத்து நிறுவனத்தின்
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வில் அறிவியல் பிரிவில் தில்லி அரசுப் பள்ளிகள் அளவில் முதலிடம் பெற்ற தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் (டிடிசி) ஓட்டுநர் மகன் பிரின்ஸ் குமாருக்கு டிடிசி சார்பில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது.
தில்லி போக்குவரத்து நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருபவர் மனோஜ் குமார். இவரது மகன் பிரின்ஸ் குமார். இவர், சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வில் 97 சதவீத மதிப்பெண்கள் பெற்று, அரசுப் பள்ளிகள் அளவில் அறிவியல் பிரிவில் முதலிடம் பெற்றார்.
இதைத் தொடர்ந்து, தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் சார்பில் வியாழக்கிழமை பிரின்ஸ் குமாருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், மாணவர் பிரின்ஸுக்கு டிடிசி மேலாண்மை இயக்குநர் பாராட்டு கடிதத்தை வழங்கினார். மேலும், மாணவருக்கும் அவரது பெற்றோருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது, கடந்த மாதம் சில விஷமிகளிடமிருந்து முதியவரின் உயிரைக் காப்பாற்றியதற்காக டிடிசி ஓட்டுநர் சுரீந்தர், நடத்துநர் மன்ஜீத் சிங் ஆகியோர் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.