FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அரசு பொதுக் காப்பீட்டு நிறுவன முகவர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும், மூத்த முகவர்களுக்கு சலுகை விலையில் மருத்துவக் காப்பீடு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட

30 ஜனவரி 2024, 11:10 pm IST
பகிர்:

ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும், மூத்த முகவர்களுக்கு சலுகை விலையில் மருத்துவக் காப்பீடு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி நாடாளுமன்றச் சாலையில் அரசு பொதுக் காப்பீட்டு நிறுவன முகவர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய பொதுக் காப்பீட்டு முகவர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரசு பொதுக் காப்பீட்டு நிறுவன முகவர்களும் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டம் தொடர்பாக அகில இந்திய பொதுக் காப்பீட்டு முகவர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் ஆர்.சுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
அரசு பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் சுமார் 12 லட்சம் முகவர்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் அனைவரும் முழு நேர முகவர்களாகவே செயல்பட்டு வருகின்றனர். 
இந்த நிறுவனங்களுக்கு பிரதான வருவாயை அதாவது சுமார் 70 சதவீதமான வருவாயை நாங்களே ஈட்டித் தருகிறோம். ஆனால், இந்த நிறுவனங்கள் சார்பில் எங்களுக்கு எவ்வித சலுகைகளும் தரப்படுவதில்லை. இந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 
ஆனால், அதே நிறுவனத்தின் முகவர்களான எங்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படுவதில்லை. இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையைக் கண்டிக்கிறோம். முகவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். மூத்த முகவர்களுக்கு சலுகை விலையில் மருத்துவக் காப்பீடு வழங்கப்பட வேண்டும். 
ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை முகவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளோம் என்றார்  அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments