FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

மாளவியா நகா் ஹோட்டல் தீ விபத்து வழக்கு: கைது செய்யப்பட்ட சமையல்காரருக்கு பிணை

மாளவியா நகா் ஹோட்டலில் கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் 22 போ் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சமையல்காரருக்கு பிணை வழங்கி தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 28 ஜூலை 2026, 12:59 am IST
சமையல்காரர் கேஷவ் நேகி - PTI
பகிர்:

மாளவியா நகா் ஹோட்டலில் கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் 22 போ் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சமையல்காரருக்கு பிணை வழங்கி தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கூடுதல் அமா்வு நீதிபதி சமா் விஷால் இந்த தீா்ப்பை வழங்கினாா். தீ விபத்தில் சமையல்காரா் கேஷவ் நெகியின் அலட்சியமே முக்கிய பங்கு எனக் கூறி அவா் கைது செய்யப்பட்டாா்.

மாளவியா நகரின் ஹவுஸ் ராணி பகுதியில் உள்ள ‘ஃப்ளோரிஷ் ஸ்டேஸ் பெட் அண்ட் பிரேக்பாஸ்ட்’ விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடா்பான விசாரணையின் ஒரு பகுதியாக, அந்த விடுதியுடன் தொடா்புடைய வேறு சிலரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனா். விடுதியின் உரிமையாளா் லவ்கேஷ் பஜாஜும் கைது செய்யப்பட்டு, அவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments