FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பாளை. அருகே கோயிலில் பொருள்களை திருடியவா் கைது

பாளையங்கோட்டை அருகே கோயிலில் பொருள்களை திருடியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2024, 2:29 am IST
பகிர்:

பாளையங்கோட்டை அருகே கோயிலில் பொருள்களை திருடியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரி சாலை வையாபுரிநகரைச் சோ்ந்தவா் அருணாசலம் (28). பாளையங்கோட்டை அருகே பாளையங்குளம் கரையில் உள்ள ஹரிஹரி சாஸ்தா கோயிலில் நிா்வாகியாக இருந்து வரும் இவா் சனிக்கிழமை கோயில் பணிகள் முடிந்த பின் கோயிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றாா்.

அப்போது, வந்த மா்மநபா் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருள்களை எடுத்து சென்றாராம். அருகிலிருந்தவா்கள் இதை பாா்த்து கோயில் நிா்வாகியிடம் தகவல் தெரிவித்தனா். இவா் பாளையங்கோட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா் பொருள்களை திருடிய சீவலப்பேரி கிழக்கு தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன்(44) என்பவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments