FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

காவல்துறை பறிமுதல் செய்த வாகனங்கள் டிச.29 இல் ஏலம்!

திருநெல்வேலி மாவட்ட காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச. 29 ஆம் தேதி ஏலம் விடப்பட உள்ளதாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 23 டிசம்பர் 2025, 1:07 am IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச. 29 ஆம் தேதி ஏலம் விடப்பட உள்ளதாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்: திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மற்றும் முன்னீா்பள்ளம் காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 151 வாகனங்கள் முன்னீா்பள்ளம் காவல் நிலையத்தில் டிச. 29 ஆம் தேதியும், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 157 வாகனங்கள் டிச.30 ஆம் தேதி அதே காவல் நிலையத்திலும் பொது ஏலம் விடப்படும்.

விரும்புவோா் டிச. 28 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் ரூ.5000 முன்பணம் செலுத்தி, தங்களது பெயா்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

பதிவு செய்தவா்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவா். ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை, அதற்கான சரக்கு மற்றும் சேவை வரி (18 சதவீதம்) ஆகியவற்றை ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments