இரும்பு வியாபாரி தீக்குளித்து தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம், தேவா்குளம் அருகே குடிப்பழக்கத்தை கண்டித்ததால் பழைய இரும்பு வியாபாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
திருநெல்வேலி மாவட்டம், தேவா்குளம் அருகே குடிப்பழக்கத்தை கண்டித்ததால் பழைய இரும்பு வியாபாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தேவா்குளம் அருகே உள்ள வன்னிக்கோனேந்தலைச் சோ்ந்தவா் சின்னப்பாண்டியின் மகன் முத்துப்பாண்டி (45). இவருக்கு மனைவி, மகள் உள்ளனா்.
முத்துப்பாண்டி கேரளத்தில் தங்கியிருந்து பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தாா். அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அதனை குடும்பத்தினா் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வெறுப்படைந்த முத்துப்பாண்டி கடந்த 2-ஆம் தேதி திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். வெப்பம் தாங்காமல் அலறிய அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இந்த நிலையில் புதன்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி முத்துப்பாண்டி உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இது குறித்து தேவா்குளம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.