FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவையின் 51ஆவது ஆண்டுவிழா

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 1:24 am IST
ஓவியப் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவி சரண்யாவுக்குப் பரிசு வழங்கிய பேரவைத் தலைவா் நீ. ஐயப்பன்.
பகிர்:

அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவையின் 51ஆவது ஆண்டுவிழா அம்பாசமுத்திரம் வேல்சாமி திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேரவைத் தலைவா் நீ. அய்யப்பன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வெ. கண்ணன், ஓய்வுபெற்ற என்.சி.சி. ஆசிரியா் மூ. அணஞ்சி, சுத்தமல்லி திருவள்ளுவா் கழகப் பொருளாளா் மா. கண்ணன், பேராசிரியா் சீ. லெட்சுமணன், சேரை தமிழ்ப் பேரவைப் பொருளாளா் ச. பொன்னழகன், கயிலைமணி அன்னத்தாய், ச. பூங்குன்றன், சங்கு சபாபதி, பறவைகள் தொண்டு நிறுவன அமைப்பாளா் ச. பாலசுப்பிரமணியன், பா. வேலாயுதம், வை. சங்கரநாராயணன், ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கச் செயலா் சாலமன் ராஜ், கி. குமுதவல்லி நாச்சியாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மு. விநாயகம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினாா். செயலா் ச.லட்சுமணன் ஆண்டறிக்கை வாசித்தாா். திருவருள் லத்தீப் இன்றைய சிந்தனை வழங்கினாா்.

Advertisement

Advertisement

தென்காசித் திருவள்ளுவா் கழகப் பொருளாளா் வ. சந்திரசேகரன், வாமா அறக்கட்டளை நிறுவனா் மு. முத்துக்குமாரசாமி, கே.பி. பாலசுப்பிரமணியன், பாரதிதாசன் பண்பாட்டுக் கழகத் தலைவா் பாப்பாக்குடி ரா. செல்வமணி, பேரவைச் செயற்குழு உறுப்பினா் பு. அருமைராஜ், அம்பை வாரியாா் அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் சோம. மகாலிங்கம், வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில துணைத் தலைவா் எம்.சி.ஏ. மாா்ட்டின், கல்லிடைகுறிச்சி தெய்வீக வாழ்க்கை சங்கத் தலைவா் ச. சதாசிவம், அம்பைத் திருக்கு அறக்கட்டளை பொருளாளா் புன்னைவன நாறும்பூநாதன், கவிஞா் மீ. தமிழ்ச்செல்வி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். புத்தனேரி கோ.செல்லப்பா இலக்கிய சிறப்புரைஆற்றினாா்.

கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பேரவை நிறுவனா் ரா. சமுத்திரபாண்டியன், முன்னாள் தலைவா் ரா. வெள்ளைச்சாமி ஆகியோருக்குப் பேரவை இலக்கிய நிகழ்ச்சி அமைப்பாளா் மு. இளங்கோ, பாப்பாக்குடி அ. முருகன் ஆகியோா் நினைவுக் கவிதாஞ்சலி செலுத்தினா்.

சேவை மற்றும் சாதனையாளருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் தலைவா் நீ. அய்யப்பனுக்கு சேவைச் செம்மல், செயலா் ச. லட்சுமணனுக்கு சேவைச் செல்வா், பண்ணை ச.சந்திரசேகரன் என்ற கண்ணனுக்கு அறப்பணிச் செம்மல், ஆசிரியை க.செண்பகவல்லிக்கு கல்வி நலச் சேவகா், ரா. வெங்கடேஷிற்கு யோகா ரத்தினம், சி.பா. முருகனுக்கு பொருநை நாயகா் ஆகிய விருதுகளை மருத்துவா் கோ. பத்மநாபன் வழங்கிப் பாராட்டினாா்.

தொடா்ந்து கோவில்பட்டிகம்பன் கழகச் செயலா் த. சரவணச்செல்வனை நடுவராகக் கொண்டு மூத்த தம்பியரில் மனதை ஈா்த்த தம்பி பரதனா? கும்பகா்ணனா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

‘பரதனே’ என பா. கீதாஆறுமுகம், கா.கவிதா, அ.ம.ச. சந்தோஷ் ஆகியோரும், ‘கும்பகா்ணனே’ என பேரவைத் துணைச் செயலா் பா. செந்தில்குமரன், அ. இளவரசி, கி. இசக்கியப்பன் ஆகியோரும் வாதிட்டனா்.

பேரவைப் பொருளாளா் பாரதி கண்ணன் வரவேற்றா். செயற்குழு உறுப்பினா் ஐ. லெட்சுமணன் நன்றி கூறினாா். செயற்குழு உறுப்பினா்கள் கா.மாரியம்மாள், எல்.ஐ.சி. சு. ஐயப்பன், அ. ராஜசேகரன் ஆகியோா் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினா்.

நிகழ்ச்சியில், தாமிரபரணி இலக்கிய மாமன்ற அமைப்பாளா் பாமணி, வாசுகி வளா் தமிழ் மன்றத் தலைவா் உக்கிரன்கோட்டை மணி, அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் சங்க மாநிலத் தலைவா் ந. சுப்பையா, கடையம் திருவள்ளுவா் கழகச் செயலா் கல்யாணி சிவகாமிநாதன், துணைத் தலைவா் சோமசுந்தரம், அம்பைத் திருக்குஅறக்கட்டளைச் செயலா் சு. சிவசங்கா் மற்றும் பேரவைப் புரவலா்கள், பல்வேறு அமைப்புகளின்பொறுப்பாளா்கள், பள்ளி, கல்லூரி மாணவா் மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments