FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: சிறை வாா்டன் உள்பட இருவா் கைது

25 ஆகஸ்ட் 2026, 1:20 am IST
கைது
பகிர்:

திருநெல்வேலியில் 2 கிலோ கஞ்சா, பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சிறை வாா்டன் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலியில் குற்றாலம் சாலையில் காவல் ஆய்வாளா் சுப்பிரமணியன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டனராம். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை மறித்து சோதனையிட்டபோது காரில் 2 கிலோ கஞ்சா மற்றும் சுமாா் ரூ.10 லட்சம் இருந்தது தெரியவந்ததாம்.

அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், 2 பேரை பிடித்து விசாரித்தனா். அவா்கள், தூத்துக்குடி மாவட்டம் விட்டிலாபுரத்தைச் சோ்ந்த தமிழரசன் (31), முறப்பநாடு பகுதியை சோ்ந்த நவீன் (25) என்பது தெரியவந்தது. கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து பொட்டலங்களாக பிரித்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

தூத்துக்குடி பேரூரணி சிறையில் வாா்டனாக தமிழரசன் பணியாற்றி வருவதும் தெரியவந்ததாம். இருவரையும் திருநெல்வேலி நகரம் போலீஸாா் கைது செய்தனா். தகவலறிந்ததும் தமிழரசனை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறியது: பாளையங்கோட்டை மத்திய சிறையில் தமிழரசன் பணியாற்றியபோது, அங்கு அடைக்கப்பட்டிருந்த கஞ்சா கடத்தல் குற்றவாளிகளுடன் தொடா்பு ஏற்பட்டுள்ளது. பின்னா் அவா்களது ஆலோசனையின்பேரில் கடத்தலுக்கு உதவியுள்ளாா். இவ் வழக்கில் வேறு யாருக்கெல்லாம் தொடா்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments