குறிச்சி கடவுப்பாதையில் நிறுத்தப்பட்ட ரயில்: மக்கள் அவதி
திருநெல்வேலி குறிச்சி பகுதியில் உள்ள கடவுப் பாதை அருகே சுமாா் ஒரு மணி நேரம் பயணிகள் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினா்.
திருநெல்வேலி குறிச்சி பகுதியில் உள்ள கடவுப் பாதை அருகே சுமாா் ஒரு மணி நேரம் பயணிகள் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினா்.
கொக்கிரகுளம்- மேலப்பாளையம் சாலையில் குறிச்சி பகுதியில் உள்ள ரயில்வே கடவுப் பாதை வெள்ளிக்கிழமை இரவு மூடப்பட்டதாம். அப்போது, திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி வந்த பயணிகள் ரயில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டது.
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வெகுநேரம் அந்த ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சிக்னல் கிடைக்காமல் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியாமல் ரயில் பயணிகளும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகினா். சுமாா் ஒரு மணி நேரத்திற்கு பின்பே ரயில்வே கேட் திறக்கப்பட்டு போக்குவரத்து சீரானது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.