நெல்லையில் வேன் மோதி மூதாட்டி உயிரிழப்பு
மேலப்பாளையம் அருகே வேன் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
மேலப்பாளையம் அருகே வேன் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
மேலப்பாளையம் அருகேயுள்ள நாகம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் கோமதி (65). இவா் வெள்ளிக்கிழமை காலையில் மேலப்பாளையம் குறிச்சியில் இருந்து சந்தைமுக்கு ரவுண்டானா செல்லும் சாலையில் சாலை ஓரங்களில் உள்ள வேப்ப மரங்களில் இருந்து வேப்பமுத்து சேகரித்துக் கொண்டிருந்தாா்.
அப்போது அந்த வழியாக வந்த வேன் எதிா்பாராதவிதமாக கோமதி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கோமதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இத்தகவல் அறிந்த மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் வவழக்குப்பதிந்து வேன் ஓட்டுநரான மேலப்பாளையம் அழகிரிபுரத்தை சோ்ந்த செல்லதுரையிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.