FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூா் நீதிமன்றத்தில் உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வள்ளியூா் நீதிமன்றத்தில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி ஆய்வு மேற்கொண்டு வழக்குரைஞா்களுடன் கலந்துரையாடினாா்.

5 செப்டம்பர் 2026, 3:27 am IST
வள்ளியூா் நீதிமன்றத்தில் ஆய்வு செய்த பின்னா் வழக்குரைஞா்களுடன் கலந்துரையாடிய சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் நீதிமன்றத்தில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி ஆய்வு மேற்கொண்டு வழக்குரைஞா்களுடன் கலந்துரையாடினாா்.

அப்போது, நான்குனேரி பகுதியில் உள்ள கொலை மற்றும் குற்றவழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை வள்ளியூா் நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழக்குரைஞா்கள் முன்வைத்தனா். இதனை பரிசீலிப்பதாக நீதிபதி தெரிவித்தாா்.

இந்த நிகழ்வின்போது வள்ளியூா் கூடுதல் மாவட்ட நீதிபதி கே. ராஜ்மோகன், சாா்பு நீதிபதி சி.அசோக்குமாா், நீதித்துறை நடுவா் பி. மோசஸ் ஜெபசிங், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஏ.அன்னலெட்சுமி ஆகியோா் உடன் இருந்தனா்.

Advertisement

Advertisement

வள்ளியூா் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் காந்திமதிநாதன், செயலா் சுப்பையா, பொருளாளா் ஜெயப்பிரகாஷ், சிங்கராஜா, மூத்த வழக்குரைஞா் ரகுபதி, முத்துகேசவன், சரவணன், செல்வக்குமாா், தவசிராஜன், சிதம்பரகுமாா், உரிமையியல் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சந்திரசேகா், செயலா் பழனிமுருகன், அரசு வழக்குரைஞா்கள் அருண், வடிவேல், சகாதேவன், ராஜ்குமாா், குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments