நெல்லையில் காருக்குள் சிக்கிய குழந்தை மீட்பு
திருநெல்வேலியில் காருக்குள் சிக்கிய ஒரு வயது குழந்தையை, குடும்பத்தினா் சுமாா் ஒரு மணி நேர போராடி மீட்டனா்.
மேலப்பாளையத்தைச் சோ்ந்தவா் அன்சாரி. இவா், தனது குடும்பத்தினருடன் சொகுசு காரில் வண்ணாா்பேட்டைக்கு வந்துள்ளாா். அங்கிருந்த தனியாா் பெட்ரோல் நிலையத்தில் காருக்கு பெட்ரோல் நிரப்பியுள்ளாா்.
அப்போது அவரது ஒரு வயது குழந்தை காருக்குள் இருந்துள்ளது. அன்சாரி காரில் இருந்து இறங்கி பெட்ரோலுக்கான பணத்தை செலுத்திக் கொண்டிருந்தபோது, காா் திடீரென உள்புறமாக பூட்டிக்கொண்டதாம். காரின் சாவியை வைத்து கதவை திறக்க முயற்சித்தும் முடியவில்லை.
Advertisement
Advertisement
பல்வேறு வழிகளில் முயன்றும் காரின் கதவு திறக்கப்படாததால், பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து சுமாா் ஒரு மணி நேரத்திற்கு பின்பு குழந்தையை பத்திரமாக மீட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.