ரேஷன் கடை பணியாளா்கள் கருப்புச் சட்டை அணிந்து பணி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளா் சங்கம் சாா்பில், ராதாபுரம், திசையன்விளை வட்டார ரேஷன் கடைகளில் விற்பனையாளா்கள் கருப்புச் சட்டை அணிந்து பணிசெய்யும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் தாயுமானவா் திட்டத்தில் உள்ள சிக்கல்களுக்குத் தீா்வு காண வேண்டும், ‘ப்ளூடூத்’ முறைக்கு பதிலாக ஸ்கேன் முறையைப் பயன்படுத்த வேண்டும், மாதந்தோறும் 15 ஆம் தேதிக்குப் பிறகு பொருள்களை விநியோகிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
வியாழக்கிழமை வரையில் (செப்.10) கருப்புச் சட்டை அணிந்து பணிபுரிவது என ரேஷன் கடை பணியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.