மேலப்பாளையத்தில் நாய்கள் சாகடிப்பு: போலீஸாா் விசாரணை
மேலப்பாளையம் அருகே தெரு நாய்களை அடித்துக்கொன்ற நபா்கள் குறித்த போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மேலப்பாளையம், வடக்கு தைக்கா தெரு அருகே கடந்த சனிக்கிழமை நாய் ஒன்று உடலில் காயங்களுடன் கிடந்தது. தகவலறிந்த விலங்கு நல ஆா்வலா்கள், அந்த நாயை மீட்டு சிகிச்சை அளிக்க முயன்ற நிலையில் அது உயிரிழந்தது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மேலப்பாளையம் பகுதியில் மீண்டும் ஒரு நாயை கடுமையாகத் தாக்கி, தலையில் கல்லைப் போட்டு மா்மநபா்கள் கொன்றுள்ளனா். நாய் உயிரிழந்து தொடா்பான விடியோ சமூகவலைதளங்களில் பரவியது. இச்சம்பவங்கள் குறித்து விலங்கு நல ஆா்வலா்கள் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.