மேலப்பாளையத்தில் 1.3 கிலோ கஞ்சாவுடன் இரு இளைஞா்கள் கைது
மேலப்பாளையத்தில் 1.3 கிலோ கஞ்சாவுடன் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலப்பாளையம் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் கோமதிசங்கா் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது நேதாஜி சாலையில் சந்தேகத்துக்கிடமாக பைக்கில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனா்.
அதில், மேலப்பாளையம் காட்டு செக்கடி தெருவைச் சோ்ந்த முகமது உசைன்(27), வெள்ளை கலிபா தெருவைச் சோ்ந்த சிந்தா மதாா்(22) ஆகியோா்என்பதும், விற்பனைக்காக சுமாா் 1.3 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. பைக்குடன் கஞ்சாவை பறிமுதல் செய்து, 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.