குழித்துறையில் மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு
குழித்துறையில் மூதாட்டியை தாக்கி நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
குழித்துறையில் மூதாட்டியை தாக்கி நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
குழித்துறை அருகே படப்பறை பகுதியைச் சேர்ந்தவர் எலிசபெத் (60). இவர் செவ்வாய்க்கிழமை மாலையில் அப்பகுதியிலிருந்து குழித்துறை சந்திப்பு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர் இவரிடம் ஒரு முகவரி குறித்து விசாரித்தனராம். பின்னர் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்தவர் எலிசபெத் கழுத்தில் அணிந்திருந்த இரண்டே முக்கால் பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனராம்.
இது குறித்து புகாரின் பேரில் களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.