நாகர்கோவிலில் இன்றுபுத்தகக் கண்காட்சி தொடக்கம்
தேசிய புத்தகக்கண்காட்சி தொடக்க விழா நாகர்கோவிலில் புதன்கிழமை (டிச.19) நடைபெறுகிறது.
தேசிய புத்தகக்கண்காட்சி தொடக்க விழா நாகர்கோவிலில் புதன்கிழமை (டிச.19) நடைபெறுகிறது.
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆகியவற்றின் சார்பில் நாகர்கோவில் வருவாய்த் துறை அலுவலர் சங்கக் கட்டடத்தில் மாலை 5 மணிக்கு புத்தகக் கண்காட்சியை, மாவட்டஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தொடங்கிவைக்கிறார். நியூ செஞ்சுரி புத்தக நிறுவன மண்டல மேலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி வரவேற்கிறார்.
இதில், சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் சொக்கலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் இசக்கிமுத்து, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் கோலப்பன், மாவட்டச் செயலர் சுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி, பேராசிரியர் சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். டிரஸ்ட் மேலாளர் பாலசுப்பிரமணி நன்றி கூறுகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.