திராவகம் குடித்த மூதாட்டி சாவு
மார்த்தாண்டம் அருகே திராவகம் குடித்த மூதாட்டி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மார்த்தாண்டம் அருகே திராவகம் குடித்த மூதாட்டி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
திக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராஜமணி மனைவி மரிய ஜெனோபா (60). ராஜமணி பல ஆண்டுகளுக்கு முன் மனைவியை பிரிந்து சென்று விட்டாராம். அதன் பின்னர், மரியஜெனோபா தனது மகன், மகளுடன் வசித்து வந்தார். இவரது மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன் இவரது மகன் உயிரிழந்ததையடுத்து மரிய ஜெனோபா மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்நிலையில், இவர் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் திராவகம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட அப்பகுதியினர் இவரை மீட்டு, மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.