FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

பாலூர் ஊராட்சியில் நாளை 2ஆம் கட்ட மனுநீதி நாள் முகாம்

குமரி மாவட்டம், பாலூர் ஊராட்சியில் மாவட்ட வருவாய் அலுவலரின் 2ஆம் கட்ட மனு நீதி நாள் முகாம் புதன்கிழமை (ஜூன் 27) நடைபெறுகிறது.

Updated On : 26 ஜூன் 2018, 7:33 am IST
பகிர்:

குமரி மாவட்டம், பாலூர் ஊராட்சியில் மாவட்ட வருவாய் அலுவலரின் 2ஆம் கட்ட மனு நீதி நாள் முகாம் புதன்கிழமை (ஜூன் 27) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
கன்னியாகுமரி மாவட்டம்,  விளவங்கோடு வட்டம், பாலூர் வருவாய் கிராமம்,  பாலூர் ஊராட்சிக்குள்பட்ட மூசாரி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட வருவாய் அலுவலரின்  மனுநீதித்திட்ட (இரண்டாம் கட்டம்) நிறைவு நாள் நிகழ்ச்சி வரும் புதன்கிழமை         காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
கடந்த மாதம் 17ஆம் தேதி நடைபெற்ற மனுநீதி திட்ட முதல் கட்ட நிகழ்ச்சியின்போது பெறப்பட்ட மனுக்களுக்கான உரிய பதில்கள் இந்த இரண்டாம் கட்ட நிறைவு நாள் நிகழ்ச்சியில், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் பொது மக்களுக்கு தெரிவிக்கப்படும். 
மேலும் இந்நிகழ்ச்சியில் துறைவாரியாக அரசு நலத் திட்ட விவரங்களும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments