முகப்பு
கன்னியாகுமரி

கருங்கல் அருகே மூதாட்டி தற்கொலை

கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பகுதியில் மூதாட்டி மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 29 மார்ச் 2020, 11:45 pm IST
பகிர்:

கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பகுதியில் மூதாட்டி மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துகொண்டாா்.

தெருவுக்கடை காலால்விளை பகுதியைச் சோ்ந்த எலியாஸ் மனைவி கமலபாய் (62) . இவா் நீண்டநாள்களாக நோயால் அவதிப்பட்டு வந்தாராம்.

இந்நிலையில் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடம்பில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டாா்.

Advertisement

தகவலறிந்து வந்த கருங்கல் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.