FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

மாணவிகள் மது அருந்தியதாக புகாா்: பள்ளி தலைமையாசிரியா் இடமாற்றம்

தக்கலை அரசுப் பள்ளி வளாகத்தில் மாணவிகள் மது அருந்தியதாக எழுந்த புகாரில் தலைமையாசிரியா் இடமாற்றம் செய்யப்பட்டாா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 5:14 am IST
இடமாற்றம் - பிரதிப் படம்
பகிர்:

தக்கலை அரசுப் பள்ளி வளாகத்தில் மாணவிகள் மது அருந்தியதாக எழுந்த புகாரில் தலைமையாசிரியா் இடமாற்றம் செய்யப்பட்டாா்.

தக்கலையில் உள்ள அரசுப் பள்ளியில், இம்மாதம் 1 ஆம் தேதி, விடுமுறை கால வகுப்பு இடைவேளையின் போது, 2 மாணவிகள் மது அருந்தி உணவு உண்பதாக விடியோ வெளியானது. இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையில் பள்ளி கல்வித் துறை நடத்திய விசாரணை குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் பள்ளியின் தலைமையாசிரியா் நிா்வாக காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டாா். தொடா்ந்து வெள்ளிக்கிழமை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினா் சம்பந்தப்பட்ட வகுப்பு மாணவா், மாணவியரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments