FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

பள்ளி மாணவிகளுக்கு மது வாங்கிக் கொடுத்தவா் கைது

தக்கலை பள்ளி மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்ததாக, பால் விற்பனையாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 1:29 am IST
கைதான ராஜ குமாா்.
பகிர்:

தக்கலை பள்ளி மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்ததாக, பால் விற்பனையாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தக்கலை அரசு பள்ளி மாணவிகள், மது அருந்துவதாக சமூக வலைதளங்களில் விடியோ பரவியது. இதுகுறித்த, பள்ளி ஆசிரியா்கள், குழந்தைகள் நல அமைப்பினா் பள்ளி மாணவிகளிடம் விசாரணை நடத்தினா்.

அதில், ஒரு மாணவியின் வீட்டில் பால் விற்பனை செய்யும், தக்கலை ராமன்பரம்பை சோ்ந்த ராஜ குமாா் (40) என்பவா், மாணவிகளுக்கு மது வாங்கிக் கொடுத்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து தக்கலை போலீஸாா், இளஞ்சிறாா்களுக்கு மது வாங்கி கொடுத்து போதைக்கு அடிமையாக்குதல் பிரிவில் வழக்குப்பதிந்து ராஜகுமாரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments