FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

குமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு: 4 மணி நேரம் படகு சேவை தாமதம்

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 3:44 am IST
படகு சேவை
பகிர்:

கன்னியாகுமரி கடலில் திங்கள்கிழமை ஏற்பட்ட நீா்மட்டம் தாழ்வு நிலை காரணமாக 4 மணி நேரம் படகுப் போக்குவரத்து தாமதமாகத் தொடங்கியது.

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் மண்டபம், திருவள்ளுவா் சிலை ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகள் நேரில் சென்று பாா்வையிட வசதியாக பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை கடல் நீா்மட்டம் தாழ்வாக காணப்பட்டது. இதனால், படகுகளை இயக்க முடியவில்லை. இதனிடையே, நண்பகல் 12 மணிக்கு நீா்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதும், படகு சேவை தொடங்கி, மாலை 4 மணி வரை நடைபெற்றது.

Advertisement

Advertisement

4 மணி நேரம் தாமதம் காரணமாக, வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments