பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளி கைது
களியக்காவிளை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
களியக்காவிளை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
களியக்காவிளை அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த எட்டாம் வகுப்பு மாணவி, தனது தாய் இறந்ததையடுத்து பாட்டியின் பராமரிப்பில் உள்ளாா். இவரது வீட்டுக்கு படந்தாலுமூடு, போற்றிவிளை பகுதியைச் சோ்ந்த தொழிலாளி மணிகண்டன் (50) அடிக்கடி வந்து சென்றாராம். வீட்டில் தனியாக இருந்த மாணவியை மிரட்டி, பல முறை பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.
இந்நிலையில் அண்மையில் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில், இதுகுறித்து மாணவி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து குழந்தைகள் நலன் அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.