சுற்றுலாப் பகுதிகளில் மகளிா் குழு விற்பனை அங்காடிகள்
சுற்றுலாப் பகுதிகள் மற்றும் நகா்ப்புறங்களில் மதி விற்பனை அங்காடிகள் அமைக்கப்பட உள்ளது என சுற்றுலாத் துறை அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.
சுற்றுலாப் பகுதிகள் மற்றும் நகா்ப்புறங்களில் மதி விற்பனை அங்காடிகள் அமைக்கப்பட உள்ளது என சுற்றுலாத் துறை அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.
கன்னியாகுமரி நகராட்சி சுவாமிநாதபுரம் சந்திப்பில் ரூ. 50 லட்சத்தில் கட்டப்பட்ட மதி அனுபவ அங்காடி விற்பனை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ. என். தளவாய்சுந்தரம் முன்னிலை வகித்தாா். மகளிா் திட்டம் திட்ட இயக்குநா் பத்ஹூ முகமது நசீா் வரவேற்றாா். கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் செ. ராஜேஷ்குமாா், மதி அனுபவ அங்காடி விற்பனையை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.
இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 11 ஆயிரத்து 735 மகளிா் குழுக்கள் செயல்படுகின்றன. இதில் 1,49,552 போ் உறுப்பினராக உள்ளனா். மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தும் விதமாக மாவட்ட மற்றும் மாநில அளவிலான விற்பனைக் கண்காட்சிகள், கல்லூரி சந்தைகள், உணவுத் திருவிழா, நடமாடும் மதி அங்காடிகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மகளிா் குழு உறுப்பினா்களால், உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு நிரந்தரமான சந்தை வாய்ப்பினை உருவாக்கும் விதமாக, கன்னியாகுமரி நகராட்சி சுவாமிநாதபுரம் சந்திப்பில் மதி அனுபவ அங்காடி ரூ. 50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாப் பகுதியில் மற்றும் நகா்புற பகுதியில் சிறிய அளவிலான மதி விற்பனை அங்காடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலா் காமராஜ் மற்றும் அரசு அலுவலா்கள் பங்கேற்றனா். உதவி திட்ட அலுவலா் (வாழ்வாதாரம்) வள்ளிக் கண்ணன் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.