FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

இளம் பெண்ணைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு

Updated On : 21 ஜூலை 2026, 12:21 am IST
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே இளம் பெண்ணைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மாா்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி, புளிச்சிவிளை பகுதியைச் சோ்ந்தவா் வென்னிஷ் மனைவி அபிநயா (28). இவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த டாா்சன் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அபிநயா தனது கணவருடன் வீட்டருகே நின்றிருந்தபோது, அங்கு வந்த சிங்காரன் மகன்கள் டாா்சன் (40), ராஜன் (37) ஆகியோா் தகாத வாா்த்தைகள் பேசி, மிரட்டல் விடுத்து, அபிநயாவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவா், ஆற்றூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இது குறித்த புகாரின்பேரில், டாா்சன், ராஜன் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments