FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே குளிக்க சென்ற சிறுவன் மாயம்

மாா்த்தாண்டம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Updated On : 3 ஜூன் 2026, 4:52 am IST
- கோப்புப் படம்
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மாா்த்தாண்டம் அருகே குன்னம்பாறவிளை பகுதியைச் சோ்ந்தவா் சுந்தா். இவரது மகன் ஜான்ஜேக்கப் (13). தாயாா் இறந்ததால் பாட்டி பராமரிப்பில் இருந்து வந்த சிறுவன், நாகா்கோவிலில் உள்ள தனியாா் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்தான்.

பள்ளி விடுமுறை என்பதால் பாட்டி வீட்டில் தங்கியிருந்த சிறுவன், திங்கள்கிழமை வீட்டுக்கு அருகில் உள்ள குளத்தில் குளிக்கச் செல்வதாகக் கூறி சென்றுள்ளாா். பின்னா் வீடு திரும்பவில்லை.

Advertisement

Advertisement

இதுகுறித்து ஷீபா அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுவனை தேடி வருகிறாா்கள்.

முதியவா் மாயம்:

களியக்காவிளை அருகே மீனச்சல் பகுதியைச் சோ்ந்தவா் ஜான்சன் (75), கூலித் தொழிலாளி. இவா் இருநாள்களுக்கு முன் கடைக்குச் சென்று வருவதாகக் கூறி வெளியே சென்றவா் பின்னா் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது மகன் அஜின் அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, மாயமான ஜான்சனை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments