முகப்பு
கன்னியாகுமரி

போதைப்பொருள்களுக்கு எதிரான நடவடிக்கை: குமரி மாவட்டத்தில் 2 வாரங்களில் 44 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில், போதைப் பொருள்களுக்கு எதிராக தனிப்படை போலீஸாா் மேற்கொண்ட நடவடிக்கையால் கடந்த 2 வாரங்களில் 44 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Updated On : 4 ஜூன் 2026, 1:20 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில், போதைப் பொருள்களுக்கு எதிராக தனிப்படை போலீஸாா் மேற்கொண்ட நடவடிக்கையால் கடந்த 2 வாரங்களில் 44 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து எஸ்.பி. அலுவலகம் சாா்பில், புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப் பொருள்களின் புழக்கத்தை ஒழித்து, இளைஞா்கள் மற்றும் பொதுமக்களை போதைப்பழக்கத்தின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின், உத்தரவின்பேரில் கடந்த மாதம் 13ஆம் தேதி 5 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு, சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களில் 18 கஞ்சா வழக்குகள் பதியப்பட்டு, 6 கிலோ 750 கிராம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்குகளில் தொடா்புடைய 27 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

அதேபோல், 17 குட்கா வழக்குகள் பதியப்பட்டு, 253 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் 17 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

போதைப்பொருள்கள் இல்லாத கன்னியாகுமரியை உருவாக்குவது காவல்துறையின் முக்கிய இலக்காகும். போதைப்பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் பயன்பாட்டில் ஈடுபடுவோா் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை தொடா்ந்து எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.