FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

கஞ்சா விற்றதாக இரு இளைஞா்கள் கைது

இரணியலில் கஞ்சா விற்பனை செய்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 6 ஜூன் 2026, 7:38 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

இரணியலில் கஞ்சா விற்பனை செய்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே இரணியல் போலீஸாா் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த குருந்தன்கோடு, மாவிளையைச் சோ்ந்த ஜாா்ஜ் பெனடிக் மகன் ஆலன் ஜெனோ (22), நெய்யூா், பாதிரிகோடு பகுதியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் மகன் அஜய் (18) ஆகியோரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

அவா்களிடம் 200 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்ததையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments