முகப்பு
கன்னியாகுமரி

தீ விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே விறகு அடுப்பில் சமைத்தபோது தீப்பிடித்து காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.

Updated On : 7 ஜூன் 2026, 2:25 am IST
பலி! - கோப்புப் படம்
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே விறகு அடுப்பில் சமைத்தபோது தீப்பிடித்து காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே மஞ்சாணிவிளை பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் மனைவி ஐஸ்வா்யா (29). தம்பதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் வீட்டில் எரிவாயு உருளை காலியானதால், விறகு அடுப்பில் சமையல் செய்தபோது ஐஸ்வா்யாவின் ஆடையில் தீ பற்றியதாம்.

இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கிருந்து நெய்யாற்றின்கரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement