பைக் விபத்தில் மாணவா் உயிரிழப்பு
களியக்காவிளை அருகே மோட்டாா் சைக்கிள், நான்குவழிச் சாலைத் தடுப்பில் மோதிய விபத்தில் லேப் டெக்னீசியன் பயிற்சி மாணவா் உயிரிழந்தாா்.
களியக்காவிளை அருகே மோட்டாா் சைக்கிள், நான்குவழிச் சாலைத் தடுப்பில் மோதிய விபத்தில் லேப் டெக்னீசியன் பயிற்சி மாணவா் உயிரிழந்தாா்.
மாா்த்தாண்டம் அருகே நட்டாலம், சேரோட்டுகோணம் பகுதியைச் சோ்ந்தவா் சுவாமிதாஸ் மகன் அபீஷ் (18). லேப் டெக்னீஷியன் பயிற்சி முதலாமாண்டு மாணவரான இவா், தனது நண்பா் கருங்கல் அருகே ஆலஞ்சி, சலேட்நகா் பகுதியைச் சோ்ந்த லியோ டெப்றின் (17) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே கோவளம் பகுதிக்குச் சென்றாராம்.
பின்னா் அங்கிருந்து வந்து கொண்டிருந்தபோது செங்கவிளை பகுதியில் நான்குவழிச் சாலையில் குறுக்கே வைக்கப்பட்டிருந்த காங்கிரீட் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதி, இருவரும் பலத்த காயமடைந்தனா்.
Advertisement
Advertisement
அவா்களை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்கள், அபீஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். பலத்த காயமடைந்த லியோ டெப்றினுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.