முகப்பு
கன்னியாகுமரி

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 8 ஜூன் 2026, 2:09 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

தக்கலை அருகே உள்ள புலியூா்குறிச்சி குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி, சாட்சியாபுரத்தைச் சோ்ந்தவா் தாமஸ் (63). இவா் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தக்கலை, புலியூா்குறிச்சி பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள கடைகளில் வேலை செய்து வந்தாா். அண்மைக்காலமாக, மருந்து கோட்டை பகுதியில் வேலை செய்து வந்தாா்.

இவா் வெள்ளிக்கிழமை இரவு வேலை முடிந்து வரும்போது, வீட்டின் அருகிலுள்ள குளத்தில் குளிக்க இறங்கியபோது தவறி விழுந்து உயிரிழந்துள்ளாா்.

Advertisement

Advertisement

அவரது சடலத்தை சனிக்கிழமை மீட்ட தக்கலை போலீஸாா், கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்தனா்.