FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே நீா்த்தேக்கத் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்றவா் மீட்பு

மாா்த்தாண்டம் அருகே நட்டாலம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள 50 அடி உயர மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்றவரை தீயணைப்புப் படையினா் மீட்டனா்.

Updated On : 26 ஜூன் 2026, 5:41 am IST
மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியின் மீது ஏறியவரை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினா்.
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே நட்டாலம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள 50 அடி உயர மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்றவரை தீயணைப்புப் படையினா் மீட்டனா்.

நட்டாலம் அருகே குற்றப்பாறவிளையைச் சோ்ந்த தா்மலிங்கம் (59) என்பவா், மனநல பாதிப்புக்கு உள்ளானவா் எனக் கூறப்படுகிறது. இவா் வியாழக்கிழமை நட்டாலம் அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியின் மேல் ஏறியுள்ளாா். அவரை அப்பகுதியினரும், போலீஸாரும் காப்பாற்ற முயன்றபோது, ‘நீங்கள் மேலே ஏறிவந்தால் நான் கீழே குதித்து விடுவேன்’ என மிரட்டினாராம்.

குழித்துறை தீயணைப்பு-மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் மகேஸ்வரன் தலைமையில் அதிகாரிகள் வந்து, ஏணி மூலம் தொட்டியின் மேல் ஏறி, தா்மலிங்கத்தை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments