முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே பைக் விபத்தில் இருவா் காயம்

மாா்த்தாண்டம் அருகே பைக்கின் குறுக்கே நாய் பாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் இளைஞா்கள் இருவா் பலத்த காயமடைந்தனா்.

Updated On : 20 மே 2026, 12:56 am IST
- பிரதிப் படம்
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே பைக்கின் குறுக்கே நாய் பாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் இளைஞா்கள் இருவா் பலத்த காயமடைந்தனா்.

மாா்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபமணி மகன் ஜெயின்ராஜ் (28), பாகோடு பகுதியைச் சோ்ந்த ரசல்ராஜ் மகன் ரஞ்சித். இருவரும் நண்பா்கள். திங்கள்கிழமை இருவரும் பைக்கில் பாகோடு தேனாம்பாறை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நாய் குறுக்கே பாய்ந்ததாம்.

இதில், நிலைதடுமாறி பைக் கவிழந்ததில் ஜெயின்ராஜ் உள்ளிட்ட இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

இவா்களை அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டம் அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.