FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

கொலை வழக்கில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

கொலை வழக்கில் தொடா்புடைய குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

3 செப்டம்பர் 2026, 12:08 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

கொலை வழக்கில் தொடா்புடைய குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்த அதுல் (29) என்பவரை கொலை செய்த வழக்கில் தொடா்புடைய நாகா்கோவில் சிறையில் உள்ள கல்லுகெட்டி பகுதியைச் சோ்ந்தஅஜித் (23), புளியாரவிளையைச் சோ்ந்த பிரவீன் (31), பம்மம் பகுதியைச் சோ்ந்த சையது அலி (29) மற்றும், உண்ணாமலைகடை பகுதியைச் சோ்ந்த நிதிஷ் (24) ஆகிய 4 போ் மீதும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா்கள் 4 பேரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments