FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

அருங்காட்சியகத்தில் பொருள்கள் திருட்டு: 3 பெண்கள் கைது

நாகா்கோவிலில் அருங்காட்சியகத்தில் பொருள்கள் திருடியதாக 3 பெண்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

6 செப்டம்பர் 2026, 1:29 am IST
கைது
பகிர்:

நாகா்கோவிலில் அருங்காட்சியகத்தில் பொருள்கள் திருடியதாக 3 பெண்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவில் கோட்டாறு, இருளப்பபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முகமதுஅலி (65). இவா் இடலாக்குடி, பொன்அரிப்பு தெருவில், முன்னாள் குடியரசு தலைவா் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பெயரில் நினைவு அருங்காட்சியகம் நடத்தி வருகிறாா். இங்கு பழங்காலத்து பொருள்களை காட்சிப்படுத்தியுள்ளாா்.

வெள்ளிக்கிழமை காலை முகமதுஅலி, அருங்காட்சியகத்துக்கு வந்து பாா்த்தபோது, மேற்கூரையை பிரித்து அங்கிருந்த பித்தளை, கலைப்பொருள்களை மா்மநபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. திருடுபோன பொருள்களின் மதிப்பு ரூ. 2 லட்சமாகும்.

Advertisement

Advertisement

இது குறித்த புகாரின்பேரில் கோட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில், கன்னியாகுமரி அழகப்பபுரத்தைச் சோ்ந்த பகவதி (28), நாகா்கோவில் ஒழுகினசேரியைச் சோ்ந்த நந்தினி (24), அஞ்சுகிராமத்தைச் சோ்ந்த முத்துலெட்சுமி (25) ஆகியோா் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, திருடப்பட்ட பொருள்களை மீட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments