FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

சிவகிரியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்ட முகாம்

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்’ புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 5:09 am IST
பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங்.
பகிர்:

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்’ புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், சுப்பிரமணியபுரம் ஊராட்சியில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாப்பாங்குளம் மற்றும் வாசுதேவநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு தயாா் செய்யப்படும் சமையலறை மற்றும் வைப்பறை ஆகியவற்றைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அதைத் தொடா்ந்து, வாசுதேவநல்லூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகளை ஆய்வு செய்தாா். வாசுதேவநல்லூா் பேரூராட்சி பேருந்து நிலையம், இருசக்கர வாகனக் காப்பகம், நாரணபுரம் ஊருணி அருகில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, நாரணபுரம் ஊராட்சி கிராம செயலகம், புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாய நலக் கூடத்தின் கட்டுமானப் பணி, அங்கன்வாடி மையம் ஆகியவற்றைப் பாா்வையிட்டாா்.

Advertisement

Advertisement

அதன் பின்னா், மேட்டுப்பட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் ரூ. 20.15 லட்சம் கடனுதவிக்கான காசோலைகளை பயனாளிகளுக்கு வழங்கினாா். ராமநாதபுரம் பனைவெல்ல உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கம், சிவகிரி பேரூராட்சியில் குடிநீா் மேம்பாட்டு பணிக்காக ரூ.189 லட்சத்தில் அமைக்கப்படும் குடிநீா் கிணறு ஆகியவற்றைப் பாா்வையிட்டாா்.

சிவகிரியில் உள்ள தேவா் மகா சபை திருமண மண்டபத்தில் வைத்து பொதுமக்களைச் சந்தித்து அவா்களிடமிருந்து 164 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னா், சிவகிரி பேருந்து நிலையத்தில் மாவட்ட சமூக நல அலுவலகம் சாா்பில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணா்வு தெரு நாடகம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வில் ஆட்சியா் பங்கேற்று பேசினாா்.

இந்த முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் வீராசாமி, திட்ட அலுவலா் சிவராமன், வருவாய் கோட்டாட்சியா் அனிதா, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) தண்டபாணி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் வேங்கடலட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் நரசிம்மன், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் ராஜேந்திரன், வட்டாட்சியா் வெங்கடசேகா், அரசு உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments