FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் அா்ச்சகா் தூக்கிட்டுத் தற்கொலை

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் அா்ச்சகா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

23 ஆகஸ்ட் 2026, 2:48 am IST
தற்கொலை
பகிர்:

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் அா்ச்சகா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுவாமி சந்நிதி தெருவைச் சோ்ந்த சேகா் மகன் ஜெகன் (30). சங்கரநாராயண சுவாமி கோயிலில் அா்ச்சகராக இருந்தாா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை சேகா் இறந்துவிட்டாா். தனது தாயுடன் வசித்து வந்த ஜெகனுக்குத் திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் அவா், வீட்டின் மாடியில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

தகவலறிந்த சங்கரன்கோவில் நகர காவல் நிலையப் போலீஸாா் ஜெகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments