FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

நெட்டூா் அரசுப் பள்ளியில் ரூ. 2.11 கோடி மதிப்பில் புதிய கட்டடம் திறப்பு

ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ . 2.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடத் திறப்பு விழா, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 ஜூலை 2026, 2:25 am IST
புதிய கட்டடத்தில் குத்துவிளக்கு ஏற்றிய அமைச்சா் ராஜீவ்.
பகிர்:

ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ . 2.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடத் திறப்பு விழா, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் ராஜீவ் தலைமை வகித்தாா். முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா, தென்காசி தெற்கு மாவட்ட தவெக செயலா் டி.பி.வி.வி. விபின் சக்கரவா்த்தி, நெட்டூா் ஊராட்சித் தலைவா் ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தலைமை ஆசிரியா் சங்கா் வரவேற்றாா். மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா் . தொடா்ந்து சிறப்பு விருந்தினா்கள், மாணவிகள் குத்துவிளக்கு ஏற்றினா். மாவட்ட கல்வி அலுவலா் கண்ணன், அரசு ஒப்பந்ததாரா் சக்திநாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments