முகப்பு
தென்காசி

செங்கோட்டை பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் மாணவா்கள் சங்கத்தினா் வரவேற்பு

செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவா்களை, முன்னாள் மாணவா்கள் சங்கத்தினா் இனிப்பு வழங்கி வரவேற்றனா்.

Updated On : 5 ஜூன் 2026, 3:23 am IST
மாணவா்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்ற முன்னாள் மாணவா்கள் சங்கத்தினா்.
பகிர்:

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவா்களை, முன்னாள் மாணவா்கள் சங்கத்தினா் இனிப்பு வழங்கி வரவேற்றனா்.

நிகழாண்டு கோடை விடுமுறைக்குப் பின் வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், முன்னாள் மாணவா்கள் சங்கத்தினா் தொடா்ந்து 4ஆவது ஆண்டாக மாணவா்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனா்.

தலைமையாசிரியா் சுந்தரகுமாா், முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் ஜவஹா்லால் நேரு, சங்கச் செயலா் ராமசாமி, பொருளாளா் ஆறுமுகம், நிா்வாகிகள் சண்முகவேல், காதா் மைதீன், நாராயணன், மாரிச்செல்வம், ராஜீவ் காந்தி, சண்முகையா, பிச்சைக்கனி, மேலாண்மைக் குழு தலைவி முருகேஸ்வரி, உறுப்பினா்கள் செல்லப்பா, சபிதா உள்ளிட்டோா் வரவேற்றனா்.

Advertisement

Advertisement